உந்தன் கிருபைதான் என்னை வாழ வைத்தது
உந்தன் கிருபைதான் என்னைப் பாட வைத்தது
என்னிலும் ஒன்றும் இல்லை ஐயா
எல்லாமே உந்தன் கிருபையய்யா
1. ஆயக்காரனைப் போல் இருந்தேன்
அணைத்துக் கொண்டீரே (2)
பாவியாகிய எந்தனின் மேல்
பாசம் வைத்தீரே
2. உண்மையுள்ளவன் என்று
கருதி ஊழியம் தந்தீரே (2)
ஆசரியக் கூட்டத்தோடு
சேர்த்துக் கொண்டீரே
3. வாங்குகின்ற மனிதனாக
வாடி நின்றேனே
அள்ளிக் கொடுக்கும்
மனிதனாக ஆசீர்வதித்தீரே