உந்தன் கிரியைகள் தேவன் அறிவார்
உந்தன் பெலனும் கொஞ்சமாயினும்
வேதவசன வழியில் நடந்து
தேவனை மறுதலியாமல் வாழ்ந்தால
உனக்கு முன்னே திறந்த வாசல் அநுகூல வாசல்
ஒருவரும் என்றும் பூட்டிட முடியா பெரிய வாசல்
ஆரம்பகால துரித சுதந்திரம்
முடிவில் பெறாது ஆசிவாதமே அறிவாய்
ஆண்டுகள் அநேகம் காத்து ஜெபித்தால்
ஆண்டவர் அருளும் ஆசீர்வாதமே பெறுவாய்
பின்மாரி பொழிய ஜெபித்து கண்ணீர் சிந்து
உழைத்து வேர்வை சிந்து
இரத்தம் சிந்திட வா (உந்தன்)
1. தரிசான நிலத்தை பண்படுத்துங்கள்
எழுந்து கட்டுவோம் வந்து சேருங்கள் – இன்றே
சத்தியம் கைக்கொள்ளும் நீதியின் ஜனம்
உள்ளே வந்திட வாசல் திறவுங்கள் இன்றே (பின்மாரி)
2. தேசத்தின் ஜனங்களே திடனடையுங்கள்
கர்த்தர் சொல்கிறார் வேலை நடத்துங்கள் – இன்றே
பிந்தின ஆலயம் மகிமை பெரியது
சேனையின் கர்த்தர் உடனிருக்கிறார் பயமேன் (பின்மாரி)