ஜீவாதிபதி, ஜோதியே 1. ஜீவாதிபதி, ஜோதியே, பக்தரின் இன்ப இயேசுவே, லோகின் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும். 2. பாதம் சேர்ந்தோரை மீட்பரே, இவ்வுண்மை என்றும் மாறாதே; தேடுவோர்க்கு நீர் நல்லவர், பற்றுவோர்க்கு சம்பூரணர். 3. விண் அப்பம் உம்மில் ருசிப்போம், முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்; நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே. 4. மாறிடும் வாழ்க்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும் உம் அருட் பார்வை இன்பமே, விசுவாசிப்போருக்கு பாக்கியமே. 5. தங்கும் எம்மோடு, இயேசுவே, எக்காலும் ஆற்றித் தேற்றுமே; காரிருள் பாவம் ஓட்டுமே, உம் தூய ஜோதி வீசுமே.