கர்த்தர் தாம் எங்கள் துர்க்கமும்
1. கர்த்தர் தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர் தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும்
நிகர் புவியில் இல்லை.
2. எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்
எங்களுக்காய் வேறொருவர்
போர்செய்வதற் கேற்பட்டோர்
ஆர்? இயேசு கிறிஸதுதான்
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்,
சேனாபதி அவர்,
ஜெயிப்பார் அவர்தாமே.
3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம் கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்.
இருளின் பிரபு
சீறினாலும் அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.
4. பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்.
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ?
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே யிருக்கும்.
1. கர்த்தர் தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர் தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும்
நிகர் புவியில் இல்லை.
2 / 4
கர்த்தர் தாம் எங்கள் துர்க்கமும்
2. எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்
எங்களுக்காய் வேறொருவர்
போர்செய்வதற் கேற்பட்டோர்
ஆர்? இயேசு கிறிஸதுதான்
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்,
சேனாபதி அவர்,
ஜெயிப்பார் அவர்தாமே.
3 / 4
கர்த்தர் தாம் எங்கள் துர்க்கமும்
3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம் கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்.
இருளின் பிரபு
சீறினாலும் அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.
4 / 4
கர்த்தர் தாம் எங்கள் துர்க்கமும்
4. பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்.
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ?
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே யிருக்கும்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen