சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்! (2)
1. அதி சுந்தர நிரை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன். (2)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்!
2. மத்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரிசுத்தனார். (2)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்!
3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபானார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் (2)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்!
4. அபிராம் முனி மிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன். (2)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்!
5. சாதாரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடைகோத்ர திரு வேஷன். (2)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்!
6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன். (2)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம்!