இறங்குஞ் சுடராய் மேவியே. (2)
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர
வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.
1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்,
வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.
2. என்றன் பாவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும்.
வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.
3. குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும்,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் யேசுவுக் கனுதினம்பணி செய்ய,
வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.