நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.
1. தம்பிரான் ஒருவனே,
தம்பமே தருவனே; - வரு
தவிது குமர குரு பரமனுவேலே
நம்பிவந்தேனே, - நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.
2. நின்பாத தரிசனம்
அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில்
நம்பிவந்தேனே, - நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.
3. நாதனே, கிருபைகூர்
வேதனே, சிறுமைதீர், - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே
நம்பிவந்தேனே, - நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.
4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே
நம்பிவந்தேனே, - நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.
5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
நம்பிவந்தேனே, - நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.