நல்லாவி ஊற்றும் தேவா நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா (2) 1. பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே. நல்லாவி ஊற்றும் தேவா. 2. மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டென்னையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே. நல்லாவி ஊற்றும் தேவா. 3. ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும். நல்லாவி ஊற்றும் தேவா. 4. பாவம் செய்யாதிருக்க பாரில் சாட்சி பகர பார் மீட்க வந்த பரமனையே பாரோர்க்கு எடுத்துரைக்க. நல்லாவி ஊற்றும் தேவா. நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா (2)