என் இயேசு ராஜாவுக்கு
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம். (2)
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கின்றேன் (2)
முழு உள்ளத்தோடு உம் நாமம். (2)
பாடிப் புகழுவேன் நான்
பாடிப் புகழுவேன்.
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்.
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே (2)
கைவிடப்பட்டு கதறினேன் (2)
கர்த்தர் நீர் தேற்றினீர் ஆ ஆ
கர்த்தர் நீர் தேற்றினீர்.
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்.
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக (2)
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன். (2)
ஓயாமல் பாடுவேன் – நான்
ஓயாமல் பாடுவேன்.
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்.
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர். (2)
எனது ஜீவனை அழிவில் நின்று. (2)
காத்து இரட்சித்தீரே ஆ ஆ
காத்து இரட்சித்தீரே.
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்.