போற்றுவேன் வணங்குவேன் துதி பாடி மகிழ்வேன்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2) மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே --- போற்றுவேன் 2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2) ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே --- போற்றுவேன் 3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2) என் பாவம் போக்க உம்மை பாழாக்க உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் --- போற்றுவேன்