1 / 2
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம்
ஏங்குதையா
உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கின்றேன்
இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா
தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே
பேரின்பக் கடலிலே
ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும்
மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முக சாயலாய்
உரு மாற்றும் தெய்வமே
கொடியாக படரணும்
உந்தன் நேசமே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான்
ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்