அன்பான இயேசு என்மீது இரங்கி
மண்மீது வந்தாரே
என் பாவச் சுமைகள் எல்லாமே ஏற்று
மறுவாழ்வு தந்தாரே (அன்பான இயேசு…)
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
விடுதலை தந்தாரே… – 2
ஆவியால் என்னை அபிஷேகம் செய்து
அன்போடு அனைத்தாரே… – 2 (அன்பான இயேசு…)
பொல்லாத வினைகள் எல்லாமே நீக்கி
புது வாழ்வு தந்தாரே
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவிக்க சொல்லி
ஆசாரியர் என்றாரே… – 2
சொந்தம் ஜனம் என்றாரே… – 2 (அன்பான இயேசு…)
தேடாமல் இருந்தேன் தீமைகள் செய்தேன்
தேடியே வந்தாரே… – 2
திராட்சைசெடி நானே அதில் கொடி நீயே
கனி கொடு என்றாரே… – 2 (அன்பான இயேசு…)
எனக்காக மீண்டும் வரப்போகும் தெய்வம்
வருகையை எதிர் பார்க்கிறேன்… – 2
அவர் வரும் நாளில் என் கரம் பிடித்து
தன்னோடு அழைத்து செல்வார்… – 2 (அன்பான இயேசு…)