இயேசப்பா! இயேசப்பா! இயேசப்பா – நான்
உன்னுடைய மகன் அல்லவா
இயேசப்பா! இயேசப்பா! இயேசப்பா – நான்
உம்மைப் போல மாறவேணுமே – இயேசப்பா
1. இரவெல்லாம் ஜெபித்து ஜெயம் பெற்றீரய்யா
இன்னல்களை சுமந்து இன்பம் அளித்தீரய்யா
நான் வாழ உன் ஜீவன் தந்தீரய்யா – நீர்
என்னில் வாழ என்னை நான் தந்தேனய்யா
2. தந்தையைப் போல தூக்கி சுமந்தீர்
நிந்தை அவமானங்களை எனக்காக சகித்தீர்
ஏழைக்கும் எளியோர்க்கும் இரட்சகரே
எங்க வாழ்வுக்கு வழி காட்ட வந்தவரே
3. கடல் மேலே நடந்த கர்த்தாதி கர்த்தன்
புயல் காற்றை நிறுத்தின தேவாதிதேவன்
கடலுக்கும் எல்லையைக் குறித்தவரை எங்க
கவலை எல்லாம் தீர்த்து கண்ணீர் துடைத்தவரே
4. பாவிகளை மீட்க மரித்த தெய்வம்
பாடுகளை சிலுவையிலே ஏற்றீரய்யா
மரணத்தின் கூரினை நீர் ஓடித்தீரய்யா
பாதாளத்தை ஜெயித்து எழுந்தீரய்யா