உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே நமஸ்கரிப்பேன்
உம்மையே உயர்த்திடுவேன்
உமக்கே ஊழியம் செய்வேன்
1. அதிசய தேவன் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே
ஆயிரம் ஆயிரமாய்
அற்புதங்கள் செய்பவரே-உம்மை
2. தாயின் கருவில் காத்தவரே
தந்தையைபோல் சுமந்தவரே
ஆயுள்வரையும் காப்பேன் என்றீர்
ஆனந்தமாய் பாடசெய்தீர்
3. மகிமையுள்ள தேவன் நீரே
மகத்துவமானவரே
மாட்சிமையுள்ளவரே
மன்னிப்பதில் வள்ளவரே-உம்மை
4. முதலாளி தேவன் நீரே
வேலைக்கார பிள்ளை நானே
எல்லாமே பார்த்துக்கொள்ளும்
என்னுடைய தந்தை நீரே
5. சர்வ வல்ல தேவன் நீரே
சாவாமையுள்ளவரே
சாத்தானை வென்றவரே
சந்தோஷம் தருபவரே
6. யேகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
யேகோவா ரப்பா நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே (வைத்தியரே)