உன் வழிகளிலெல்லாம்
இயேசுவை நினைத்துக் கொள்
உந்தன் பாதைகளை அவர் செவ்வையாக்குவார்
1. ஆகாயத்து பறவைகளுக்கு வழியை காட்டுபவர்
ஆழ்கடலின் கப்பலுக்கு திசையை சொல்லுபவர்
அஞ்சாதே மனமே அஞ்சாதே
தஞ்சம் இயேசு பாதம் வந்தால்
வழியை காட்டிடுவார் – நல்வழியை காட்டிடுவார்
2. அழகாய் உடுத்தும் காட்டுபுஷ்பம்
உடுத்துவது யாரோ?
அனுதினம் கூப்பிடும் காகங்களை
போஷிப்பது யாரோ? – அஞ்சாதே
3. மேய்ப்பன் இல்லாத ஆட்டினை போல
அலைந்து திரியாதே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இயேசுவிடம் வாராய் – அஞ்சாதே