எங்கே சுமந்து போகிறீர் எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2) 1. எங்கே சுமந்து போகிறீர்? இந்த கானலில் உமது (2) அங்கம் முழுதும் நோக, ஜயா, என் ஏசநாதா. எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2) 2. தோளில் பாரம் அழுத்த, தூக்கப் பெலம் இல்லாமல், (2) தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர், எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2) 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக, (2) பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2) 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர, (2) மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர, எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2) 5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும் (2) எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2) 6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது (2) தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? (2)