பேர் அலவே பூமான், - இவரே பெருமான். (2)
1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு
பலவினை யாதுமே தெரியார் (2) - இப்
புவனமீது நமக்குரியார்.
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
2. குருடர்களுக் குதவும் விழியாம், - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம், (2) - தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்.
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
3. பலபிணி தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி, (2) - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி.
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன், - கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன், (2) - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்.
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
5. அலகை தனை ஜெயித்த வீரன், - பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன், (2) - விண்
ணுலக வாழ் தேவ குமாரன்.
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
6. பொன்னுலகந் தனில்வாழ் யோகன், - அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன், - நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன். - இவரே
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.