பாதகன் என் வினைதீர், ஐயா பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. (2) தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு; பூதலத் துகந்து வந்த புண்ணியனே, யேசு தேவா. பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. 1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே, (2) உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது முந்தி மிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. 2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச் சின்னபின்னம் செய்ய வல்லதே; (2) பந்தம் உற உன்றன் வலப் பாகமுற்ற கள்வனையே விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. 3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி ஆதரிப்பதார் உன் தஞ்சமே; (2) தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.