தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)
1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், - தயை
செய்வோம் என்றே, இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)
2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று - நில்லேன்;
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)
3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை, எத்தனையோ! இவை
திண்ணம் அகற்றி எளிஞனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)
4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)
5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
மாறி அகன்றதுவே, - இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்!
ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)