ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்! – சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம்
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்!
1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத்
தாரணியிலே மனுடவ தாரம் ஆயினார்.
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்!
2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்.
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்!
3. ஞானமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்.
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்!
4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே, - இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்;
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்!
5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்!