கதிரவன் தோன்றும் காலையிதே கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே – நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே கதிரவன் தோன்றும் காலையிதே. 1. வான சுடர்கள் கானக ஜீவன் வாழ்த்திடவே பரன் மாட்சிமையே. (2) காற்று, பறவை, ஊற்று நீரோடை கர்த்தருக்கே கவி பாடிடுதே. (2) கதிரவன் தோன்றும் காலையிதே 2. காட்டில் கதறி கானக ஓடை கண்டடையும் வெளி மான்களைப் போல் (2) தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம் தற்பரன் யேசுவைத் தேடிடுவோம். (2) கதிரவன் தோன்றும் காலையிதே 3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம். (2) கேரூபீன்கள் மத்தியில் வாழும் கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார். (2) கதிரவன் தோன்றும் காலையிதே 4. எந்தன் உதடும் உந்தனை போற்றும் என் கரங்கள் குவிந்தே வணங்கும். (2) பாக்கியம் நான் கண்டடைந்தேனே யாக்கோபின் தேவனே என் துணையே. (2) கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே – நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே கதிரவன் தோன்றும் காலையிதே.