நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுமே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்
2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதில்லை தம் ஆலோசனை கோர பயங்கர காற்றடித்தும் கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் --- நெஞ்சமே 3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே ஏகிப் பறந்திடும் பக்தரோடே சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே ஜெய கம்பீரமே உனக்குண்டே --- நெஞ்சமே 4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலது பாரிசத்திலே கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் --- நெஞ்சமே 5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில் என்றும் அழிந்திட விட்டு விடார் தம் சமூகம் நித்திய பேரின்பமே சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே --- நெஞ்சமே 6. அங்கே அநேக வாசஸ்தலங்கள் அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே நேர்த்தியான இடங்களில் உந்தன் நித்திய பங்கு கிடைத்திடுமே --- நெஞ்சமே