அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே
பாத்திரர் இயேசு நாதர் புகழையே
போற்றிப் பாடிடு பாடிடு பாடிடு
இயேசு ராஜன் புகழ்பாடிடு அல்லேலூயா
1. தாழ்வில் நம்மை நினைத்தார்
வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர் காலமெல்லாம்
அவர் புகழைப் போற்றிப் பாடிடு
2. தூதர்கள் போற்றும் தேவன் துதிகளிலே
வாசம் செய்யும் தூய நேசன் மாந்தர்கள்
உள்ளத்தில் வேந்தனாய் வாழ்த்திடும்
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு
3. சேதம் இன்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரை
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு – அல்லேலூயா