அன்பில்லா உலகில் – மனிதன்
அன்பைத் தேடுகிறான் – கடல்
அலைகள் நடுவினிலே – மன
அமைதியைத் தேடுகிறான்
நிழலை நிஜமென்று – எண்ணி ஏமாந்து போகின்றான்
நிம்மதி இல்லாமல் அவன் எங்கெங்கே ஓடுகிறான்
– அன்பில்லா உலகில்
1. கட்டிக் கொண்ட கணவனுக்கு – கட்டுப்படும் தாயன்பு
பெற்றெடுத்த பிள்ளையையும்
பிரிந்து விட துணியும் அன்பு
தாயின் அன்பில் சுயநலமிருக்கு
தந்தை அன்பில் கர்வம் இருக்கு
அப்பா இயேசு கிறிஸ்துவின் அன்பு
– ஜீவனையே தந்திருக்கு
அன்பு உருவானவர் ஆறுதல் தருபவர்
உனக்குள் இருப்பவர் உண்மையுள்ளவர்
மண்ணுயிரை மீட்க தன்னுயிரை கொடுத்த
மன்னாதி மன்னன் இயேசு அன்பை மறந்து
– அன்பில்
2. கண்களிலே கண்ணீர் வந்தால் – கர்த்தர் இயேசு
கலங்கிடுவார் – உன்
கண்ணீரைத் தரையின் கீழே சிந்திடவும் விட மாட்டார்
உள்ளங்கையில் ஏந்திடுவாரே – மனம்
உருகி நின்றிடு வாரே
உண்மை அன்பு உலகில் இல்லை
உயிர் கொடுத்த இயேசுவில் உண்டு
– அன்பு உருவானவர்
3. உலகில் உன்னில் காட்டும் பாசம் வேஷம் என்று தெரிஞ்சுக்கணும்
சொந்த பந்த அன்பெல்லாம் கானல் நீர்
புரிஞ்சுக்கணும் உள்ளங்ககையில் உன்னை
வரைந்து உயிர் கொடுத்தார் தெரிஞ்சுக்கணும்
இயேசுவிடம் நிம்மதி உண்டு அன்பு உண்டு நீ வரணும்
– அன்பு உருவானவர்