ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும்
செலவு பண்ணப்படவும்
உன்னை தியாகம் செய்வாயா?
1. ஆதாரமின்றி அழிந்து போகும்
ஆத்ம மீட்பிழந்தவர்க்காய்
ஆத்தும பாரம் கொண்டவனாய்
ஆதாயம் செய்வாயா? – ஆத்மா
2. எண்ணற்ற மாணவர் நிலையிழந்து
கண்ணற்ற நிலையிலுள்ளார்
எண்ணற்ற ஆசிகள் பெற்ற நீயும்
எண்ணியே பார்ப்பாயா? – ஆத்மா
3. கோதுமை மணி நிலம் விழுந்து செத்தால்
அதிக பலன் தருமே
பிறரது பாரத்தை உன் பாரமாய்
ஏற்றிட துணிவாயா? – ஆத்மா
4. சாமுவேல், மோசே, நெகேமியா போன்ற
தீர்க்கரை அறிவாயா?
திறப்பின் வாசலில் நிற்க உள்ளம்
திறந்து கொடுப்பாயா? – ஆத்மா