ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
ஆண்டவர் இயேசு என்னை கைவிடமாட்டார்… – 2
துன்பங்கள் துக்கங்கள் சுமந்தவர்
பாடுகள் பாவங்கள் சுமந்தவர்
என் முன்னே செல்லுகின்றார்… – 2 (ஆயிரம் ஆயிரம்)
இவ் உலக பாடுகள்,
கொஞ்சக் காலம் மாத்திரமே,
அவ் உலக வாழ்வைக்கான,
காத்திருக்கிறேன்… – 2
அங்கே சென்றிடவே நான் ஆவல் கொண்டுள்ளேன்
அங்கே வாழ்ந்திடவே தேவன் கிருபை செய்திடுவார் (ஆயிரம் ஆயிரம்)
தூற்றியே திரியும் மாந்தருக்காய்
தேவனை நோக்கி துதிப்போமே
தீமைகள் செய்திடும் மாந்தரையும்
ஆசீர்வதித்து அணைப்போமே… – 2
கடவுளின் அன்பை அவர் காண செய்திடுவோம்
கடவுளின் பாதை காட்டி நாம் மகிழ்வோமே… – 2 (ஆயிரம் ஆயிரம்)
aநல்ல போராட்டம் போராடுவோம்
ஓட்டத்தை ஒழுங்காய் ஓடுவோம்
விசுவாசத்தை காத்துக்கொண்டு
ஜீவ கிரிடம் பெற்றுக் கொள்வோம்… – 2
நீதியுள்ள தேவன் நித்தமும் நடத்தியே
நித்திய வாழ்வுக்கு முத்திரை போடுவார். (ஆயிரம் ஆயிரம்)