ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே,
அடியார்கள் உள்ளங்களில்
அபிஷேகம் செய்து அனலாக்கும் எம்மை
ஆராதனைசெய்ய… – 2
அசைவாடும்… அசைவாடும்…
ஆவியான தெய்வமே அசைவாடும்… – 2
நதியோரம் நிற்க்கும் மரங்களைப்போலே
கனி தந்து நாம் வாழவே… – 2
எண்ணையால் நிறைந்து எரிகின்ற சுடர்போல
தினமும் நாம் ஒளிவீசவே… – 2 (ஆவியின்…)
இல்லங்களில் எம் உள்ளங்களில்
நீரே வாசம் செய்யும்… – 2
இதயத்தில் அன்பு நிறைவாகத் தந்து
எந்நாளும் ஆளுகை செய்யும்… – 2 (ஆவியின்…)
ஆவியின் ஏவுதலால் ஆலயம் வந்து
ஆராதனை செய்ய… – 2
ஆவியில் நிறைந்து அன்பரே உமக்கு
ஆவியின் பலி செலுத்த… – 2 (ஆவியின்…)