ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
மகிமையின் பிரசன்னம் நிறைவாய்
இறங்கட்டும் இந்த வேளையிலே
1. ஆவியிலே களிகூறவே என்றென்றும் விரும்புகிறேன்
வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே
நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன்
பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்கிறேன்
2. தாவீது போல் மகிழ்ந்திடவே சமூகம் வேண்டுகிறேன்
ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திட்டீரெ
உன்னதத்தில் உதவிடுமே ஆவிக்குள்ளாய்
அனுதினமும் அனல் போல் மாற்றிடுமே
3. மேல் வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே
ஆவிமழை கரை புரள தேசத்தை சந்தியுமே அஸ்திபாரம்
அசைந்திடவே எழுப்பிடும் சபையோரை எழுப்புதலால்
புது உள்ளங்கள் உயிர்பிக்க செய்திடுமே