ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக் கூறவும் நாவும் போதுமோ?
1. நீசதுரோகி எந்தனை பாசமாய்
ஏற்றீரோ நீர் – பாவ உளையினின்றே
தூக்கி எடுத்தீரே நீர்; – ஆஹா
2. நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற
என்னை – பாசம் வைத்தேன் உந்தனில்
என்று கூவி அழைத்தீரே நீர் – ஆஹா
3. நெரிந்த நாணல் என்னை முறித்திடும்
தருணம் – பரிந்து பேசி அன்பால்
நிலையாய் நிறுத்தினீர் – ஆஹா
4. எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட
போதிலும் – அன்பின் சவுக்கடியால்
சேர்த்தன்பாய் ஆதரித்தீர்; – ஆஹா
5. காரிருள் சூழும் வேளை கலங்கித்
தவிக்கையில் – காத்து நீர் என்னை
தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்; – ஆஹா
6. பிராண நாதா உந்தனை என்று நான்
கண்டிடுவேன் – ஆருயிர் நேசா உம்மை
என்றும் காண ஆசை பொங்குதே – ஆஹா
7. அழைப்பின் சத்தம் கேட்க நாட்கள்
அதிகமாகுமோ – நேசர் மார்பில் சாய்ந்திட
வாஞ்சை பெருகிடுதே- ஆஹா
8. ஆகாய மேகந்தனில் சேர்த்திடும்
நேரமதில் – ஆனந்தம் ஆனந்தமே
என்றென்றும் ஆனந்தமே – ஆஹா