இயேசப்பா நானும் வருகிறேன்
கலிலேயா கடலோரமாய்
என்னைவிட்டு போகாதீங்க ராஜா
என்னுள்ளம் தாங்காதுங்க -2
அன்று ஒலிவமலையில்ஏறி மறுரூபமானிங்க
கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க-2
1. எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க
என்னோடு இன்று நடந்து வாருங்க -2
அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம்
அதுதான் என் சந்தோஷமே -2
2. மார்த்தாள் அழைத்த போது கூடப்போனீங்க
மரித்த லாசரை உயிர்தெழும்பச் செய்தீங்க
உம்மாலே கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை
3. மோசேயோடு கூட நடந்து சென்றீங்க
கடலைப் பிளந்து நடக்க உதவி செய்தீனங்க
அற்புத தேவன் அதிசய தேவன்
எல்லாம் நீர் செய்திடுவீர்