இயேசுவே எனக்கொரு ஆசை
என் நெஞ்சில் உள்ள ஆசை
கேட்பாயோ அன்போடு
என் அன்பு தேவனே வா-2
1. நெஞ்சுக்குள்ளே என்னை வச்சி பூட்டிக்கொள்வாயா
உன் கண்ணுக்குள்ளே கருவிழியாய்
சேர்த்துக்கொள்வாயா எண்ணமெல்லாம் கத கதையாய்
நான் சொல்ல வேணும் – என்றும்
என் அருகில் நீ இருந்து
என் குறை போக்கணும்.
2. காடு மலை மேடு எல்லாம் பூமியாகணும் – இந்த
ஜாதி மத பேதமெல்லாம்
மாறிப்போகணும் நம்பி வரும் மனிதரெல்லாம்
வாழ்வு காணனும் உன்னை நா மணக்க பாடிப்பாடி
நான் துதிக்கணும்