இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவியாத்திரை தீர்ந்திடும் போதே
பரலோகம் அழைத்திடுமே
2. இந்த மண்ணுலகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கித் தொடருகிறேன் – எந்
3. நம் முன்னோர் பலர் அக்கரை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்துகொள்வேன் – எந்
4. அற்பமான சரீரம் அழிந்தே
அடைவேன் மறுரூபமாக
புதுராகம் குரல் தொனியோடே
புதுப்பாட்டு பாடிடுவேன் – எந்
5. பரலோகத்தில் இயேசுவே அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம்
ஆவல் தீர அணைத்துக் கொள்ளுவோம் – எந்
6. உண்மையாக உம் ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே காத்த கரத்தில்