உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்
சிலுவை சுமந்தே உனக்காய்
அவர் மரித்தாரே
1. பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தைத் தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய் – உன
2. இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசுன்னை அழைக்கிறாரே – உன்
3. நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பதும் ஏன்
உண்மையாய் அறிந்திடுவாய் – உன்
4. தம்மிடம் வருபவரைத்
தள்ளிடவே மாட்டார்
அன்புகரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே – உன்