உன்னைக் கண்ணின் மணிபோல் காக்கும் தேவன்
உறக்கம் கொள்வதில்லை
ஒருபோதும் விலகாமல்
உன்னோடு இருந்து காக்கும் தேவன்
என்றும் மறப்பதில்லை
1. காலைத்தள்ளாட வொட்டார்
உன்னைக் காக்கிறவர் உறங்கார்
உன்னதர் அரணாய் வந்திடுவார்
உனக்கு துணையாய் நின்றிடுவார்
இரவோ பகலோ எதுவும் உன்னை
சேதமே படுத்தாதே
2. தேவன் உன் தாபரமே எந்த
பொல்லாப்பும் நேரிடாதே
வாதை உன் இல்லத்தை அணுகவிடார்
வல்லமை தேவன் உன் துணையே
கரம்பிடித்தே உன்னை நடத்திசெல்வாரே
கைவிட மாட்டாரே
3. நீடித்த நாட்களாலே உன்னை
திருப்தியாக்கிடுவார்
கழுகினைப் போல உன் வயதை
வால வயதாய் மாற்றிடுவார்
இஸ்ரவேலின் தேவன் உன்னை
என்றுமே காத்திடுவார்
4. தாய்தன் பாலகளை இந்த
தரணியில் மறப்பதுண்டோ
தாயினும் மேலாய் நேசித்திடும்
தூயவர் உன்னை மறப்பதில்லை
தயவாய் தினமும் நடத்தும் தேவனின்
அன்போ மறைவதில்லை
5. நீதியின் வலக்கத்தால் உன்னை
நிதமும் நடத்திடுவார்
நீ செல்லும் பாதையில் முன்நடந்து
நிழலாய் அனுதினம் காத்திடுவார்
கருணையின் தேவன் உன்னோடு இருப்பார்
என்றும் நீ கலங்கிடாதே