• myspiritualvoice2025@gmail.com

Header
shape
ஞானப்பாடல்
எப்போதும், யேசு நாதா
1. எப்போதும், யேசு நாதா உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்குக் கொடுத்தேன்; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர், அப்போது அஞ்சிடேன்; முன் சென்று பாதை காட்டும்; நான் வழி தவறேன். 2. பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால், என் ஆத்மா மயங்காமல், தெய்வீகப் பலத்தால் நீர் துணை நின்று தாங்கும், என் அருள் நாயகா; தீங்கணுகாமல் காரும், மா வல்ல ரட்சகா. 3. ஆங்காரம், சுய சித்தம், தகாத சிந்தையால் மா கலக்கம் உண்டாகி நான் தடுமாறினால், நீர் பேசும், அருள் நாதா, கொந்தளிப்படங்கும்; உம் நேச சத்தம் கேட்டு என் ஆவி மகிழும். 4. "பின்பற்றினால் விண் வீட்டில் பேரின்பம் பெறுவீர்" என்றே உம் சீஷர் நோக்கி நீர் வாக்கு அளித்தீர்; அவ்வருள் வாக்கை நம்பி இவ்வேழை அடியேன் "இதோ, பின் செல்வேன்" என்று தீர்மானம் பண்ணினேன். 5. ஓயாமல் பெலன் தாரும்; உம் அடிச்சுவட்டில் கால் வைத்து நடந்தேகி நான் யாத்ரை செய்கையில் நீர் வழி காட்டி, என்னைக் கைதாங்கி வருவீர்; அப்பாலே மோட்ச வீட்டில் பேர் வாழ்வை அருள்வீர்.
1 / 5

எப்போதும், யேசு நாதா

1. எப்போதும், யேசு நாதா உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்குக் கொடுத்தேன்; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர், அப்போது அஞ்சிடேன்; முன் சென்று பாதை காட்டும்; நான் வழி தவறேன்.

2 / 5

எப்போதும், யேசு நாதா

2. பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால், என் ஆத்மா மயங்காமல், தெய்வீகப் பலத்தால் நீர் துணை நின்று தாங்கும், என் அருள் நாயகா; தீங்கணுகாமல் காரும், மா வல்ல ரட்சகா.

3 / 5

எப்போதும், யேசு நாதா

3. ஆங்காரம், சுய சித்தம், தகாத சிந்தையால் மா கலக்கம் உண்டாகி நான் தடுமாறினால், நீர் பேசும், அருள் நாதா, கொந்தளிப்படங்கும்; உம் நேச சத்தம் கேட்டு என் ஆவி மகிழும்.

4 / 5

எப்போதும், யேசு நாதா

4. "பின்பற்றினால் விண் வீட்டில் பேரின்பம் பெறுவீர்" என்றே உம் சீஷர் நோக்கி நீர் வாக்கு அளித்தீர்; அவ்வருள் வாக்கை நம்பி இவ்வேழை அடியேன் "இதோ, பின் செல்வேன்" என்று தீர்மானம் பண்ணினேன்.

5 / 5

எப்போதும், யேசு நாதா

5. ஓயாமல் பெலன் தாரும்; உம் அடிச்சுவட்டில் கால் வைத்து நடந்தேகி நான் யாத்ரை செய்கையில் நீர் வழி காட்டி, என்னைக் கைதாங்கி வருவீர்; அப்பாலே மோட்ச வீட்டில் பேர் வாழ்வை அருள்வீர்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen