திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்
1. திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்
அருள் ஜோதியிலே நிலைப்போம்;
வல்ல ஆவியினால் தேவ சித்தஞ் செய்தால்
பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்.
கீழ்ப்படிவோம்
தேவசித்தம் செய்வோம்;
திருவாக்கை எப்போதும்
நம்பி கீழ்ப்படிவோம்.
2. மேகம் தோன்றுமானால் அன்பின் சூரியனால்
அது நில்லாமல் மறைந்தேபோம்;
சோர்வு சந்தேகமும், அவநம்பிக்கையும்
அணுகாமலே முன் செல்லுவோம்.
கீழ்ப்படிவோம்
தேவசித்தம் செய்வோம்;
திருவாக்கை எப்போதும்
நம்பி கீழ்ப்படிவோம்.
3. எந்த வேளையிலும், இன்ப துன்பத்திலும்
அருள்நாதர் சகாயஞ் செய்வார்;
வரும் சோதனையோ, மன சஞ்சலமோ
இவை நீக்கியே பாதுகாப்பார்.
கீழ்ப்படிவோம்
தேவசித்தம் செய்வோம்;
திருவாக்கை எப்போதும்
நம்பி கீழ்ப்படிவோம்.
4. நம்பிக் கீழ்ப்படிந்தே திருப்பாதத்திலே
நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்;
பெருநன்மை ஈவார் அபிஷேகஞ் செய்வார்
தேவ ஆவியைப் பெற்றுக்கொள்வோம்.
கீழ்ப்படிவோம்
தேவசித்தம் செய்வோம்;
திருவாக்கை எப்போதும்
நம்பி கீழ்ப்படிவோம்.
5. கர்த்தரோடின்பமாய், அந்நியோந்நியமாய்
நீங்காமலே வாசஞ் செய்வோம்;
அவர் சொற்படியே உண்மையோடுடனே
மனோற்சாகமாய் கீழ்ப்படிவோம்.
கீழ்ப்படிவோம்
தேவசித்தம் செய்வோம்;
திருவாக்கை எப்போதும்
நம்பி கீழ்ப்படிவோம்.