எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே
எங்கள் ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
எங்கள் யேகோவா தெய்வமே
துணையாளரே உம்மை துதிக்கையிலே
துன்பமெல்லாம் தூசியாக பறக்குதையா
துயரமெல்லாம் நீங்குதையா
துள்ளிப்பாட உள்ளமெல்லாம் ஏங்குதையா
வல்ல தெய்வமே இப்போ வாருமையா
வல்லமையால் எங்களை நிரப்புமையா
வறண்டு போன என் வாழ்க்கையிலே
வாழ்வெல்லாம் வசந்தம் ஆக்குமையா
அன்பின் ராஜனே உம் அபிஷேகத்தை
பிள்ளைகளாம் எங்கள் மேலே ஊற்றுமையா
பெலனடைந்து உம்மை உயர்த்திடவே
கிருபை எங்களுக்கு தாருமையா