எந்தன் நினைவெல்லாம் பேச்செல்லாம் நீரே நீரே ஐயா
எந்தன் அரணெல்லாம் நீரே பெலனெல்லாம் நீரே
நீரே நீரே ஐயா-2
நீரே நீரே ஐயா
எல்லாம் நீரே நீரே ஐயா
பலியாகி என்னை மீட்டீரய்யா-என்
பாவங்கள் சுமந்து தீர்த்தீரய்யா-2
உம்மைப்போல் வேறே தெய்வம் இல்லை
உம் அன்பிற்கு இணையாய் ஏதுமில்லை-2
நீர்;தானே எந்தன் உயிர்மூச்சு-உம்
வசனமே எனக்கு உணவாச்சு-2
தாயைப்போல் என்னை தேற்றுகின்றீர்
தந்தைப்போல் தோளில் என்னை சுமக்கின்றீர்
என் உயிரோடு கலந்த உன்னதரே
நான் உயிர்வாழ்வதே உமக்காகவே